Archive for 'Lyrics'

Jaya Vande Matharam lyrics – ஜய வந்தே மாதரம்

Posted on 12. Dec, 2010 by .

1

The lyrics below are from the sound track “Jaya Vande Matharam” from the Tamil film Bharathi.

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்தருவந்தே சொல்வது
வந்தே மாதரம்

ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்

சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்

வந்தே மாதரம்

தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஓ! வந்தே மாதரம்!

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

எப்பதம் வாய்த்திடு மேனும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
எப்பதம் வாய்திடும் மேலும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
வீழில் முப்பது கோடி முழுமையில் வீழ்வோம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்த ருவந்தே சொல்வது
வந்தே மாதரம்

ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்

சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்
வந்தே மாதரம்

தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஓ! வந்தே மாதரம்!

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

Continue Reading

Nallathor veenai seidhe lyrics – நல்லதோர் வீணை செய்தே

Posted on 05. Dec, 2010 by .

0

The lyrics below are from the sound track “Nallathor veenai seidhe” from the Tamil film Bharathi.

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி!
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

தசையினை தீ சுடினும்
சிவசக்தியை  பாடும்நல் அகம் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

Continue Reading

Nirpathuve, Nadappathuve, Parappathuve Lyrics – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே

Posted on 05. Dec, 2010 by .

1

The lyrics below are from the sound track “Nirpathuve, Nadappathuve, Parappathuve” from the Tamil film Bharathi.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,

நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?

பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?

காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?

பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ?

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

Continue Reading