Akkini kunjondru kanden lyrics – அக்கினி குஞ்சொன்று கண்டேன்

The lyrics below are from the sound track “Akkini kunjondru kanden” from the Tamil film Bharathi.

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெட்டி அடிக்குது மின்னல்
கடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்
கூ கூவென்று விண்ணை குடையுது காற்று.
சட்ட் சட சட்ட் சட டட்டா
சட்ட் சட சட்ட் சட டட்டா
என்று தாளங்கள் கொட்டி கணைக்குது வானம்;
தாளம்கொட்டி கணைக்குது வானம்,

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

Jaya Vande Matharam lyrics – ஜய வந்தே மாதரம்

The lyrics below are from the sound track “Jaya Vande Matharam” from the Tamil film Bharathi.

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்தருவந்தே சொல்வது
வந்தே மாதரம்

ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்

சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்

வந்தே மாதரம்

தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஓ! வந்தே மாதரம்!

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

எப்பதம் வாய்த்திடு மேனும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
எப்பதம் வாய்திடும் மேலும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
வீழில் முப்பது கோடி முழுமையில் வீழ்வோம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்த ருவந்தே சொல்வது
வந்தே மாதரம்

ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்

சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்
வந்தே மாதரம்

தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஓ! வந்தே மாதரம்!

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

Nallathor veenai seidhe lyrics – நல்லதோர் வீணை செய்தே

The lyrics below are from the sound track “Nallathor veenai seidhe” from the Tamil film Bharathi.

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி!
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

தசையினை தீ சுடினும்
சிவசக்தியை  பாடும்நல் அகம் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
—-

ENGLISH TRANSLATION ADDED 7-MAR-2015

நல்லதோர் வீணைசெய்தே
After making a good veena
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
Is it thrown away to deteriorate in dust?

சொல்லடி சிவசக்தி!
Tell me Sivasakthi
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
You created me with intelligence like burning flames

வல்லமை தாராயோ
Wont you give me the ability
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
To live usefully to this great land

சொல்லடி சிவசக்தி!
Tell me Sivasakthi
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
Will you make life to be a burden to land

தசையினை தீ சுடினும்
Even when fire burns the flesh
சிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்
I asked for a good mind that would sing about Sivasakthi

நசையறு மனங்கேட்டேன்
I asked for a mind free of petty worries
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
I asked for a life force that would shine bright like a gem everyday
அசைவறு மதிகேட்டேன்
I asked for unwavering intelligence
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
Do you have any obstacles in granting these?

நல்லதோர் வீணைசெய்தே
After making a good veena
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
Is it thrown away to deteriorate in dust?

Nirpathuve, Nadappathuve, Parappathuve Lyrics – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே

The lyrics below are from the sound track “Nirpathuve, Nadappathuve, Parappathuve” from the Tamil film Bharathi.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,

நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?

பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?

காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?

பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ?

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

Bharatha Samudaayam Vaazhkave Lyrics – பாரத சமுதாயம் வாழ்கவே

The lyrics below are from the sound track “Bharatha Samudaayam Vaazhkave ” from the Tamil film Bharathi.

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ – புலனில்
வாழ்க்கை இனியுண்டோ – நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு – இது
கணக்கின்றித் தரு நாடு –
நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு

இனியொரு விதிசெய் வோம் –
அதை எந்த நாளும் காப்போம்,
இனியொரு விதிசெய் வோம் –
அதை எந்த நாளும் காப்போம்,
தனியொருவனுக் குணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்
ஜகத்தினை அழித்திடு வோம்

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே