நான் – பாரதியார் கவிதை

நான்
I

வானிற் பறக்கின்ற புள்ளெலாநான்
All birds flying in the sky, I am

மண்ணிற் றிரியும் விலங்கெலாநான்
All beasts roaming the sands, I am

கானிழல் வளரு மரமெலாநான்
All shady trees growing in forests, I am

காற்றும் புனலுங் கடலுமேநான்.
Winds, floods, seas, I am

 

விண்ணிற் றெரிகின்ற மீனெலாநான்
All stars that burn in the sky, I am

வெட்ட வெளியின் விரிவெலாநான்
All the expanse of empty space, I am

மண்ணிற் கிடக்கும் புழுவெலாநான்
All worms that lie on land, I am

வாரியி லுள்ள வுயிரெலாநான்.
All life forms inside water, I am

 
கம்ப னிசைத்த கவியெலாநான்
All poems written by Kamban, I am

காருகர் தீட்டு முருவெலாநான்
All imagery created by painters, I am

இம்பர் வியக்கின்ற மாட கூடம்
Mansions and halls that induce awe in people

எழினகர் கோபுரம் யாவுமேநான்.
Towers of the beautiful city, I am

 

இன்னிசைமாத ரிசையுளேனான்
Inside the sweet music of women, I am

இன்பத் திரள்க ளனைத்துமேநான்
All accumulations of joy, I am

புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாநான்
All lies of wretched people, I am

பொறையருந் துன்பப் புணர்ப்பெலாநான்.
All bonds of pain and impatience, I am

 

மந்திரங் கோடி யியக்குவோனான்
Operator of a million spells, I am

இயங்கு பொருளி னியல்பெலாநான்
All nature of things that operate, I am

தந்திரங் கோடி சமைத்துளோனான்
Creator of a million tricks, I am

சாத்திர வேதங்கள் சாற்றினோனான்.
Teacher of Sastras and Vedas, I am

 

அண்டங்கள் யாவையு மாக்கினோனான்
Maker of all universes, I am

அவைபிழை யாமே சுழற்றுவோனான்
Spinner of them flawlessly, I am

கண்டநற் சக்திக் கணமெலாநான்
All star formations that limit energies, I am

காரண மாகிக் கதித்துளோனான்.
The cause and the knower, I am

 

நானெனும் பொய்யை நடத்துவோனான்
Conductor of the illusion called me, I am

ஞானச் சுடர்வானிற் செல்லுவோனான்
Traveler in the bright sky of wisdom, I am

ஆன பொருள்க ளனைத்தினு மொன்றாய்
Unifying everything created

அறிவாய் விளங்கு முதற்சோதி நான்.
The first light of knowledge, I am

Lyrics : Aezhu swarangalukkul – ஏழு ஸ்வரங்களுக்குள்

படம் – அபூர்வராகங்கள்
பாடியவர் – வாணி ஜெயராம்
வரிகள் – கண்ணதாசன்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் – மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

Lyrics : Oruvan Oruvan Mudhalali

படம் : முத்து (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஹேய்…. சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
ஹா ஹே ஹே ஹே ஹேய்
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம் தான் உணர மறுக்கிறது

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீ தான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அது தான் உனக்கு எஜமானன்

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா

பறவைகள் என்னைப் பார்க்கும் போது
நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது
முத்து முத்து என்கிறதே

இனிமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஆங்… ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

Lyrics to Oru Kootu Kiliyaaga -ஒரு கூட்டு கிளியாக

படம் : படிக்காதவன்
பாடல் : ஒரு கூட்டு கிளியாக
பாடலாசிரியர்: வைரமுத்து
——-

ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு, பண் பாடு

இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு, ஒரு கூடு

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

முத்தைத் தருபத்தித் திருநகை – Lyrics and Meaning of Muthai Tharu Pathi

These are lyrics to the song Muthai tharu pathi thirunagai from Tamil film Arunagirinathar (1964)

The song is from Thiruppugazh.

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

பத உரை

முத்தை = முத்துப் போன்ற முத்திச் செல்வத்தை
தரு = அளிக்கும்
பத்தித் திரு நகை = வரிசையாய் விளங்கும் பற்களை உடைய

அத்திக்கு = யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு
இறை = இறைவனே
சத்தி = சத்தி வேல் (ஏந்திய)
சரவண = சரவணபவனே

முத்திக்கு = வீட்டுப் பேற்றுக்கு
ஒரு வித்து = ஒரு வித்தே
குருபர = குரு மூர்த்தியே
என ஓதும் = என்று ஓதுகின்ற

முக்கண் பரமற்கு = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு
சுருதியின் = வேதத்தின்

முற்பட்டது = முற்பட்டு நிற்கும் பிரணவத்தை
கற்பித்து = கற்பித்து
இருவரும் = பிரமன், திருமால் ஆகிய இருவரும்

முப்பத்து மூ வர்க்கத்து = முப்பது மூன்று வகையான
அமரரும்- தேவர்களும்
அடி பேண = (உனது)திருவடியை விரும்ப (அவுணருடன் போர் செய்த பெருமாளே)

பத்துத் தலை தத்த = (இராவணனுடைய) பத்து தலைகளும் சிதறும்படி
கணை தொடு = அம்பைச் செலுத்தியும்

ஒற்றைக் கிரி மத்தை = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு
பொருது = (கடலைக்) கடைந்தும்

ஒரு பட்டப்பகல் = ஒரு பட்டப் பகலை
வட்ட = வட்ட வடிவமாக உள்ள
திகிரியில் = சக்கரத்தினால்
இரவாக = இரவாகச் செய்தும்

பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் பாகனாகஇருந்த நடத்திய

பச்சைப் புயல் = பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்
மெச்சத் தகு பொருள் = மெச்சத் தகுந்த பொருளே

பட்சத்தொடு = (என் மீது) அன்பு வைத்து
ரட்சித்து அருள்வதும் = (என்னைக்) காத்தருளும்
ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?

தித்தித்தெய ஒத்து = தித்தித்தெய என்னும் தாளத்துக்கு ஒத்த வகையில்
பரிபுரம் = சிலம்பு (அணிந்த)

நிர்த்தப் பதம் வைத்து = நடனப் பதத்தை வைத்து
பயிரவி = காளி

திக்கு = திக்குகளில்
ஒட்க நடிக்க = சுழன்று நடிக்கவும்
கழுகொடு = கழுகுகளுடன்
கழுது = பேய்கள்
ஆட = ஆடவும்

திக்குப் பரி = திக்குகளைக் காக்கும்
அட்டப் பயிரவர் = எட்டு பயிரவர்கள்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு = தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு என வரும்.

சித்ர = அழகிய
பவுரிக்கு = மண்டலக் கூத்தை
த்ரிகடக என ஓத = த்ரிகடக என்று ஓதவும்

கொத்துப் பறை = கூட்டமான பறைகள்
கொட்ட = முழங்கவும்
களம் மிசை = போர்க் களத்தில்

குக்குக் குகு குக்குக் குகுகுகு- குக்குக் குகு குக்குக் குகுகுகு

குத்திப் புதை புக்குப் பிடி= இவ்வாறு ஒலி செய்து
முது கூகை = கிழக் கோட்டான்கள்

கொட்புற்று எழ = வட்டம் இட்டு எழவும்
நட்பு அற்ற அவுணரை = பகைவர்களாகிய அசுரர்களை

வெட்டிப் பலி இட்டு = வெட்டிப் பலி இட்டு
குலகிரி = குலகிரியாகிய கிரௌஞ்ச மலை

குத்துப்பட ஒத்து = குத்துப்படத் தாக்கி
பொர வ(ல்)ல = சண்டை செய்ய வல்ல
பெருமாளே = பெருமாளே