Thedi Choru Nidham Thinru – தேடிச் சோறுநிதந் தின்று

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி
என்னைப் புதியவுயி ராக்கி – எனக்
கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

Acchhamillai Acchamillai – அச்சமில்லை யச்சமில்லை

அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்ச்கத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக வெண்ணிநம்மை தூறுசெய்த பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சைவாங்கி உண்னும்வாழ்க்கை பெற்றுவிட்ட பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கைமாதர் கண்க்ள்வீசு போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லேகொண்ர்ந்து நண்பரூட்டு பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த்வேற் படைக்ள்வந்த பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன் றமைறைத்தனன் சிற்பி மற்றொன் ஓங்கிய…

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
றமைறைத்தனன் சிற்பி,மற்றொன்
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ;
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே

  • பாஞ்சாலி சபதம், இரண்டாம் பாகம்

சிற்பி ஒரு கல்லை வாயிற்படி என்று மறைத்தான். இன்னொன்றைக் கடவுளின் வடிவமென்று உயர்த்தினான். நீ எல்லோருக்கும் தாய். யாரை எங்கே, எப்படி வைக்க வேண்டுமென்று உனக்குத் தெரியும். அதனால் உன்னைச் சரணடைந்தேன், என்னைப் புலவனாக்கு

நான் – பாரதியார் கவிதை

நான்
I

வானிற் பறக்கின்ற புள்ளெலாநான்
All birds flying in the sky, I am

மண்ணிற் றிரியும் விலங்கெலாநான்
All beasts roaming the sands, I am

கானிழல் வளரு மரமெலாநான்
All shady trees growing in forests, I am

காற்றும் புனலுங் கடலுமேநான்.
Winds, floods, seas, I am

 

விண்ணிற் றெரிகின்ற மீனெலாநான்
All stars that burn in the sky, I am

வெட்ட வெளியின் விரிவெலாநான்
All the expanse of empty space, I am

மண்ணிற் கிடக்கும் புழுவெலாநான்
All worms that lie on land, I am

வாரியி லுள்ள வுயிரெலாநான்.
All life forms inside water, I am

 
கம்ப னிசைத்த கவியெலாநான்
All poems written by Kamban, I am

காருகர் தீட்டு முருவெலாநான்
All imagery created by painters, I am

இம்பர் வியக்கின்ற மாட கூடம்
Mansions and halls that induce awe in people

எழினகர் கோபுரம் யாவுமேநான்.
Towers of the beautiful city, I am

 

இன்னிசைமாத ரிசையுளேனான்
Inside the sweet music of women, I am

இன்பத் திரள்க ளனைத்துமேநான்
All accumulations of joy, I am

புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாநான்
All lies of wretched people, I am

பொறையருந் துன்பப் புணர்ப்பெலாநான்.
All bonds of pain and impatience, I am

 

மந்திரங் கோடி யியக்குவோனான்
Operator of a million spells, I am

இயங்கு பொருளி னியல்பெலாநான்
All nature of things that operate, I am

தந்திரங் கோடி சமைத்துளோனான்
Creator of a million tricks, I am

சாத்திர வேதங்கள் சாற்றினோனான்.
Teacher of Sastras and Vedas, I am

 

அண்டங்கள் யாவையு மாக்கினோனான்
Maker of all universes, I am

அவைபிழை யாமே சுழற்றுவோனான்
Spinner of them flawlessly, I am

கண்டநற் சக்திக் கணமெலாநான்
All star formations that limit energies, I am

காரண மாகிக் கதித்துளோனான்.
The cause and the knower, I am

 

நானெனும் பொய்யை நடத்துவோனான்
Conductor of the illusion called me, I am

ஞானச் சுடர்வானிற் செல்லுவோனான்
Traveler in the bright sky of wisdom, I am

ஆன பொருள்க ளனைத்தினு மொன்றாய்
Unifying everything created

அறிவாய் விளங்கு முதற்சோதி நான்.
The first light of knowledge, I am

Ethilum Ingu Iruppan Lyrics – எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

The lyrics below are from the sound track “Ethilum Ingu Iruppan” from the Tamil film Bharathi.

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்  தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான்அறிவாரோ?

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த  ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?