Nallathor veenai seidhe lyrics – நல்லதோர் வீணை செய்தே

The lyrics below are from the sound track “Nallathor veenai seidhe” from the Tamil film Bharathi.

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி!
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

தசையினை தீ சுடினும்
சிவசக்தியை  பாடும்நல் அகம் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
—-

ENGLISH TRANSLATION ADDED 7-MAR-2015

நல்லதோர் வீணைசெய்தே
After making a good veena
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
Is it thrown away to deteriorate in dust?

சொல்லடி சிவசக்தி!
Tell me Sivasakthi
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
You created me with intelligence like burning flames

வல்லமை தாராயோ
Wont you give me the ability
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
To live usefully to this great land

சொல்லடி சிவசக்தி!
Tell me Sivasakthi
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
Will you make life to be a burden to land

தசையினை தீ சுடினும்
Even when fire burns the flesh
சிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்
I asked for a good mind that would sing about Sivasakthi

நசையறு மனங்கேட்டேன்
I asked for a mind free of petty worries
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
I asked for a life force that would shine bright like a gem everyday
அசைவறு மதிகேட்டேன்
I asked for unwavering intelligence
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
Do you have any obstacles in granting these?

நல்லதோர் வீணைசெய்தே
After making a good veena
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
Is it thrown away to deteriorate in dust?

Nirpathuve, Nadappathuve, Parappathuve Lyrics – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே

The lyrics below are from the sound track “Nirpathuve, Nadappathuve, Parappathuve” from the Tamil film Bharathi.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,

நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?

பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?

காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?

பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ?

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

Bharatha Samudaayam Vaazhkave Lyrics – பாரத சமுதாயம் வாழ்கவே

The lyrics below are from the sound track “Bharatha Samudaayam Vaazhkave ” from the Tamil film Bharathi.

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ – புலனில்
வாழ்க்கை இனியுண்டோ – நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு – இது
கணக்கின்றித் தரு நாடு –
நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு

இனியொரு விதிசெய் வோம் –
அதை எந்த நாளும் காப்போம்,
இனியொரு விதிசெய் வோம் –
அதை எந்த நாளும் காப்போம்,
தனியொருவனுக் குணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்
ஜகத்தினை அழித்திடு வோம்

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை

பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே

Ninnai Charanadainthen Lyrics – நின்னை சரணடைந்தேன்

The lyrics below are from the sound track “Ninnai Charanadinthen” from the Tamil film Bharathi.

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா,  நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா,  நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கின்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்ப்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம், நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக, தீமையை ஓட்டுக
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

என்னை கவலைகள் தின்ன தகாதென்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

Give me oil in my lamp

I perhaps didn’t sing enough of this song when I was taught it at seven. As a little boy I just wondered what Hosanna meant. I didnt like the song because it was so full of Hosanna anyway.

I still don’t know what Hosanna means, there are no authoritative meanings assigned to it as much as I could find from the internet. Possible origins are as varied as Old english, Late Latin and ofcourse Hebrew.

But as I grew up this song took a different meaning. I began to like the simple words that make powerful expressions.

I dont know when I will ever get to sing this song again, or perhaps if I will sing it out loud at all.

But here goes.

Give me oil in my lamp

Give me oil in my lamp, keep me burning. Give me oil in my lamp, I pray.
Give me oil in my lamp, keep me burning. Keep me burning ’til the break of day.

Sing Hosanna, Sing Hosanna, Sing Hosanna, to the King of Kings.
Sing Hosanna, Sing Hosanna, Sing Hosanna, to the King of Kings.

Give me joy in my heart, keep me singing. Give me joy in my heart, I pray.
Give me joy in my heart, keep me singing. Keep me singing ’til the break of day.

Sing Hosanna, Sing Hosanna, Sing Hosanna, to the King of Kings.
Sing Hosanna, Sing Hosanna, Sing Hosanna, to the King of Kings.

Give me love in my heart, keep me serving. Give me love in my heart, I pray.
Give me love in my heart, keep me serving. Keep me serving ’til the break of day.

Sing Hosanna, Sing Hosanna, Sing Hosanna, to the King of Kings.
Sing Hosanna, Sing Hosanna, Sing Hosanna, to the King of Kings.

Give me peace in my soul, keep me praising. Give me peace in my soul, I pray.
Give me peace in my soul, keep me praising. Keep me praising ’til the break of day.

Sing Hosanna, Sing Hosanna, Sing Hosanna, to the King of Kings.
Sing Hosanna, Sing Hosanna, Sing Hosanna, to the King of Kings.