Lyrics : Oruvan Oruvan Mudhalali

படம் : முத்து (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஹேய்…. சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
ஹா ஹே ஹே ஹே ஹேய்
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம் தான் உணர மறுக்கிறது

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீ தான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அது தான் உனக்கு எஜமானன்

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா

பறவைகள் என்னைப் பார்க்கும் போது
நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது
முத்து முத்து என்கிறதே

இனிமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஆங்… ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

Lyrics to Oru Kootu Kiliyaaga -ஒரு கூட்டு கிளியாக

படம் : படிக்காதவன்
பாடல் : ஒரு கூட்டு கிளியாக
பாடலாசிரியர்: வைரமுத்து
——-

ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு, பண் பாடு

இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு, ஒரு கூடு

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

Imperatrix Mundi (Empress of the World)

O Fortuna (O Fortune)

velut luna (like the moon)

statu variabilis (you are changeable)

semper crescis (ever waxing)

aut decrescis; (and waning;)

vita detestabilis (hateful life)

nunc obdurat (first oppresses)

et tunc curat (and then soothes)

ludo mentis aciem, (as fancy takes it)

egestatem, (poverty)

potestatem (and power)

dissolvit ut glaciem. (it melts them like ice.)

Sors immanis (Fate – monstrous)

et inanis, (and empty)

rota tu volubilis, (you whirling wheel)

status malus, (you are malevolent)

vana salus (well-being is vain)

semper dissolubilis, (and always fades to nothing)

obumbrata (shadowed)

et velata (and veiled)

mihi quoque niteris; (you plague me too;)

nunc per ludum (now through the game)

dorsum nudum (I bring my bare back)

fero tui sceleris. (to your villainy.)

Sors salutis (Fate is against me)

et virtutis (in health)

michi nunc contraria, (and virtue)

est affectus (driven on)

et defectus (and weighted down)

semper in angaria. (always enslaved.)

Hac in hora (So at this hour)

sine mora (without delay)

corde pulsum tangite; (pluck the vibrating strings;)

quod per sortem (since Fate)

sternit fortem, (strikes down the strong)

mecum omnes plangite! (everyone weep with me!)

Ethilum Ingu Iruppan Lyrics – எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

The lyrics below are from the sound track “Ethilum Ingu Iruppan” from the Tamil film Bharathi.

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்  தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான்அறிவாரோ?

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த  ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

Keladaa Maanidavaa Lyrics – கேளடா மானிடவா

The lyrics below are from the sound track “Keladaa Maanidavaa” from the Tamil film Bharathi.

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!

எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை

வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றத பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி

பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது  ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;

அன்பு தன்னில் செழித்திடும் வையம்;

ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

கேளடா மானிடவா!

எம்மில் கீழோர் மேலோர் இல்லை

கேளடா மானிடவா!

எம்மில் கீழோர் மேலோர் இல்லை