எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான்…

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
படம் : நெஞ்சில் ஓரு ஆலயம்
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : PB ஸ்ரீநிவாஸ்

आवारा हूँ – Awaara Hoon Lyrics

आवारा हूँ, आवारा हूँ
या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ

घरबार नहीं, संसार नहीं, मुझ से किसी को प्यार नही
उस पार किसी से मिलने का इकरार नही
सुनसान नगर, अन्जान डगर का प्यारा हूँ

आबाद नहीं बरबाद सही, गाता हूँ खुशी के गीत मगर
ज़ख़्मों से भरा सीना है मेरा, हसती है मगर ये मस्त नज़र
दुनिया, दुनिया मैं तेरे तीर का या तकदीर का मारा हूँ

Lyrics : Aezhu swarangalukkul – ஏழு ஸ்வரங்களுக்குள்

படம் – அபூர்வராகங்கள்
பாடியவர் – வாணி ஜெயராம்
வரிகள் – கண்ணதாசன்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் – மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

Lyrics to Ulagam iraivanin santhai madam – உலகம் இறைவனின் சந்தை மடம்

உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
அங்கே இருக்குது வேறு உரிய இடம்
உரிய இடம்…

கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
களைப்பாற இங்கே தங்கிடுவான்
உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்

இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
மறுப்பவன் இதனை யாரும் இல்லை
மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை

பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்
இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
புரியாதவன் அறிவு தெளிவதில்லை

தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த
தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்

உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்