பட்டினத்தார்- ஒரு மட மாதும் : Oru mada maathum

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமரரும்பு கமடம் இதென்று
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவினிலிருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர்தரு ஞான குரு உபதேசம்
முத்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து
மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில்போல் அவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி
தேடிய மாமுதல் சேர வழங்கி

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே

வருவது போவது ஒருமுதுகூனும்
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து

கடன்முறை பேசும் என உரைநாவும்
உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளைபிறை போல எயிரும் உரோமம்
முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து

வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்திள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி அழல் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன் றமைறைத்தனன் சிற்பி மற்றொன் ஓங்கிய…

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
றமைறைத்தனன் சிற்பி,மற்றொன்
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ;
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே

  • பாஞ்சாலி சபதம், இரண்டாம் பாகம்

சிற்பி ஒரு கல்லை வாயிற்படி என்று மறைத்தான். இன்னொன்றைக் கடவுளின் வடிவமென்று உயர்த்தினான். நீ எல்லோருக்கும் தாய். யாரை எங்கே, எப்படி வைக்க வேண்டுமென்று உனக்குத் தெரியும். அதனால் உன்னைச் சரணடைந்தேன், என்னைப் புலவனாக்கு

நான் – பாரதியார் கவிதை

நான்
I

வானிற் பறக்கின்ற புள்ளெலாநான்
All birds flying in the sky, I am

மண்ணிற் றிரியும் விலங்கெலாநான்
All beasts roaming the sands, I am

கானிழல் வளரு மரமெலாநான்
All shady trees growing in forests, I am

காற்றும் புனலுங் கடலுமேநான்.
Winds, floods, seas, I am

 

விண்ணிற் றெரிகின்ற மீனெலாநான்
All stars that burn in the sky, I am

வெட்ட வெளியின் விரிவெலாநான்
All the expanse of empty space, I am

மண்ணிற் கிடக்கும் புழுவெலாநான்
All worms that lie on land, I am

வாரியி லுள்ள வுயிரெலாநான்.
All life forms inside water, I am

 
கம்ப னிசைத்த கவியெலாநான்
All poems written by Kamban, I am

காருகர் தீட்டு முருவெலாநான்
All imagery created by painters, I am

இம்பர் வியக்கின்ற மாட கூடம்
Mansions and halls that induce awe in people

எழினகர் கோபுரம் யாவுமேநான்.
Towers of the beautiful city, I am

 

இன்னிசைமாத ரிசையுளேனான்
Inside the sweet music of women, I am

இன்பத் திரள்க ளனைத்துமேநான்
All accumulations of joy, I am

புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாநான்
All lies of wretched people, I am

பொறையருந் துன்பப் புணர்ப்பெலாநான்.
All bonds of pain and impatience, I am

 

மந்திரங் கோடி யியக்குவோனான்
Operator of a million spells, I am

இயங்கு பொருளி னியல்பெலாநான்
All nature of things that operate, I am

தந்திரங் கோடி சமைத்துளோனான்
Creator of a million tricks, I am

சாத்திர வேதங்கள் சாற்றினோனான்.
Teacher of Sastras and Vedas, I am

 

அண்டங்கள் யாவையு மாக்கினோனான்
Maker of all universes, I am

அவைபிழை யாமே சுழற்றுவோனான்
Spinner of them flawlessly, I am

கண்டநற் சக்திக் கணமெலாநான்
All star formations that limit energies, I am

காரண மாகிக் கதித்துளோனான்.
The cause and the knower, I am

 

நானெனும் பொய்யை நடத்துவோனான்
Conductor of the illusion called me, I am

ஞானச் சுடர்வானிற் செல்லுவோனான்
Traveler in the bright sky of wisdom, I am

ஆன பொருள்க ளனைத்தினு மொன்றாய்
Unifying everything created

அறிவாய் விளங்கு முதற்சோதி நான்.
The first light of knowledge, I am

Lyrics : Aezhu swarangalukkul – ஏழு ஸ்வரங்களுக்குள்

படம் – அபூர்வராகங்கள்
பாடியவர் – வாணி ஜெயராம்
வரிகள் – கண்ணதாசன்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் – மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

Lyrics to Ulagam iraivanin santhai madam – உலகம் இறைவனின் சந்தை மடம்

உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
அங்கே இருக்குது வேறு உரிய இடம்
உரிய இடம்…

கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
களைப்பாற இங்கே தங்கிடுவான்
உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்

இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
மறுப்பவன் இதனை யாரும் இல்லை
மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை

பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்
இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
புரியாதவன் அறிவு தெளிவதில்லை

தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த
தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்

உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்