தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்” – உண்மை பொருள் என்ன?
நமக்குப் போக மிச்சமிருப்பதைத்தான் தானம் செய்ய வேண்டும் என்ற பொருள் தான் நாம் உணர்ந்து கொண்டது.
ஆனால், ஒரு மனிதன் வீடு மனை, நிலம் வண்டி ஊர்தி என எவ்வளவு சம்பாதித்தாலும் அவற்றையெல்லாம் அவனால் போகும் போது கொண்டு செல்ல முடியாது. அவன் இறக்கும் போது அவன் கொண்டு செல்ல எஞ்சியிருப்பது அவன் செய்த தானமும் தர்மமும்தான். எனவே, அவன் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்த செலவங்களுள், அவனுடன் செல்லக்கூடியது அவன் செய்த தான தர்மங்களால் உண்டாகும் புண்ணியங்களே ஆகும்.