ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது நான்கு வகைப்படும். மனித உடம்பை நான்கு பாகங்களாக வகைப் படுத்தினார். அவை:

இந்திரிய ஒழுக்கம் : கண் ,காது, மூக்கு ,வாய், உடம்பு என்பதாகும்

கரண ஒழுக்கம்: மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆச்சர்யம் என்பதாகும்.

ஜீவ ஒழுக்கம் : உயிர் என்பதாகும் .

ஆன்ம ஒழுக்கம் : உயிரை இயக்கம் உள் ஒளியாகும்.

இவைகள் மனித உடம்பை இயக்கும் கருவிகளாகும். இவைகளை கட்டுப்படுத்தி வாழ்வதே ஒழுக்கம் என்பதாகும் .

ஒழுக்கம் என்பது என்ன ?

மனிதனாக பிறந்தவர்கள் ஓழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.எல்லா ஞானிகளும் சொல்லி உள்ளார்கள் திருவள்ளுவரும் திருக்குறளில் பதிவு செய்துள்ளார் .

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் .

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப்பழி !

வள்ளலார் அவர்கள் ஒழுக்கம் எனபது எவை என்பதை தெளிவான முறையில் விளக்கம் தந்துள்ளார்கள்.

இந்திரிய ஒழுக்கம் என்பது ;—.

கொடிய சொல் செவி [காது ] புகாது நாதம் முதலிய தோத்திரங்களைக் கேட்டல்

அசுத்த பரிச இல்லாது தயா வண்ணமாகப் பரிசித்தல் .

குரூரமாக பாராது இருத்தல்,

ருசி விரும்பாமல் இருத்தல் .

சுகந்தம் விரும்பாமல் இருத்தல் .

இன் சொல்லால் பேசுதல் .

பொய் சொல்லாமல் இருத்தல் ,

ஜீவர் களுக்கு துன்பம நேரிடும் போது எவ்வித தந்திரம் செய்தாவது தடை செய்தல் ,

பெரியோர்கள் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்குச் செல்லுதல் ,

ஜீவ உபகார சம்பந்தமாக சாதுக்கள் இருக்கும் இடத்திற்கும் ,திவ்ய திருப்பதிகளிலும் செல்லுதல் .

நன் முயற்ச்சியில் கொடுத்தல், வருவாய் [ வருமானம் ] செய்தல் ,

மிதமான ஆகாரம் செய்தல்,

மிதமான போகம் செய்தல் ,

மலம சிரமம் இல்லாமல் வெளியேற்றுதல் ,

கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும்,பவுதிக மூலங்களாலும்,சரபேத அஸ்த பரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியானத்தாலும் சங்கறபத்தாலும்,தடை தவிர்த்துக் கொள்ளல் ,

[மந்ததரனுக்கு ] சுக்கிலத்தை [விந்து ] அதிகமாக வெளியேற்றாமல் நிற்றல் .

[தீவிரதரனுக்கு ]எவ்வகையிலும் சுக்கிலம் வெளியே விடாமல் நிறுத்தல் ,

இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் [துணியால் ]மறைத்தல்,

இதே போல் உச்சி ,[தலை ] மார்பு முதலிய அங்க அவையங்களை மறைத்தல் ,

வெளியில் செல்லும் காலங்களில் காலில் கவசம் [செருப்பு] தரித்தல்

அழுக்கு ஆடை உடுத்தாமல் இருத்தல் ,

இவை யாவும் இந்திரிய ஒழுக்கங்களாகும்.

கரண ஒழுக்கம் ;–

மனதைச் சிற்சபையின் [புருவ மத்தி ]கண்ணே நிறுத்தல் ,அதாவது புருவ மத்தியில் நிற்கச செய்தல் .

கெட்ட விஷயத்தை பற்றாமல் இருக்க செய்தல் ,

ஜீவ தோஷம் விசாரக்காமல் இருத்தல்.

தன்னை மதியாமல் இருத்தல்

செயற்கை குணங்களால் ஏற்ப்படும் கெடுதிகளை [இராகாதி]நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாதல்,

பிறர மீது கோபம கொள்ளாமல் இருத்தல்,

தனது சத்துருக்கள் ஆகிய தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல் ,

முதலியன கரண ஒழுக்கமாகும் ,

ஜீவ ஒழுக்கம் என்பது ;–

ஆண் மக்கள்,பெண் மக்கள்,முதலிய யாவர்கள் இடத்திலும் ஜாதி ,சமயம் ,மதம், ஆசிரமம் ,சூத்திரம் ,கோத்திரம், குலம் ,சாஸ்த்திர சம்பந்தம் ,தேச மார்க்கம் ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,–என்னும் பேதம் நீங்கி எல்லோரும் நம்மவர்கள் என்பதை சமத்திற கொள்ளுதல்
ஜீவ ஒழுக்கமாகும் ,

ஆன்ம ஒழுக்கம் ;—

யானை முதல் எறும்பு ஈறாகத் தோன்றிய உடம்பில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச சபை யாகவும் ,அதன் உள் ஒளியே அதாவது பரமானமாவே பதியாகவும் ,கொண்டு ,யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றல் –ஆன்ம ஒழுக்கமாகும் ,

இத்துடன் இடம் தனித்து இருத்தல்,இச்சை இன்றி நுகர்தல், ஜெப தபம் செய்தல் ,தெய்வம் பராவல். பிற உயிர்களுக்கு இரங்கல் ,பெருங் குணம் பற்றல் ,பாடிப் பணிதல், பத்தி செய்து இருத்தல்,–முதலிய நல்ல செய்கைகளில் பல காலம் முயன்று முயன்று பழகிப் பழகி நிற்றல் வேண்டும் .

இவையே மனித ஒழுக்கமாகும் .இவற்றை முழுவதும் பின் பற்றுபவர்கள் நான்கு புருஷார்த்தங்கள் அடைவார்கள் .

அவைகள் ;–

சாகாக் கல்வி .
ஏமசித்தி,
தத்துவ நிக்கிரகஞ் செய்தல் ,
கடவுள் நிலை அறிந்து அம மயமாதல் .

என்பதாகும் இவையே மனிதன் மரணத்தை வெல்லும் வழியாகும் .இதை வள்ளலார் கடை பிடித்தார் மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமானார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் ,நாமும் அவர் காட்டிய வழியில் வாழ்ந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வோம் .

2 thoughts on “ஒழுக்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.