Imperatrix Mundi (Empress of the World)

O Fortuna (O Fortune)

velut luna (like the moon)

statu variabilis (you are changeable)

semper crescis (ever waxing)

aut decrescis; (and waning;)

vita detestabilis (hateful life)

nunc obdurat (first oppresses)

et tunc curat (and then soothes)

ludo mentis aciem, (as fancy takes it)

egestatem, (poverty)

potestatem (and power)

dissolvit ut glaciem. (it melts them like ice.)

Sors immanis (Fate – monstrous)

et inanis, (and empty)

rota tu volubilis, (you whirling wheel)

status malus, (you are malevolent)

vana salus (well-being is vain)

semper dissolubilis, (and always fades to nothing)

obumbrata (shadowed)

et velata (and veiled)

mihi quoque niteris; (you plague me too;)

nunc per ludum (now through the game)

dorsum nudum (I bring my bare back)

fero tui sceleris. (to your villainy.)

Sors salutis (Fate is against me)

et virtutis (in health)

michi nunc contraria, (and virtue)

est affectus (driven on)

et defectus (and weighted down)

semper in angaria. (always enslaved.)

Hac in hora (So at this hour)

sine mora (without delay)

corde pulsum tangite; (pluck the vibrating strings;)

quod per sortem (since Fate)

sternit fortem, (strikes down the strong)

mecum omnes plangite! (everyone weep with me!)

Ethilum Ingu Iruppan Lyrics – எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

The lyrics below are from the sound track “Ethilum Ingu Iruppan” from the Tamil film Bharathi.

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்  தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான்அறிவாரோ?

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த  ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

Keladaa Maanidavaa Lyrics – கேளடா மானிடவா

The lyrics below are from the sound track “Keladaa Maanidavaa” from the Tamil film Bharathi.

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!

எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை

வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றத பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி

பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது  ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;

அன்பு தன்னில் செழித்திடும் வையம்;

ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

கேளடா மானிடவா!

எம்மில் கீழோர் மேலோர் இல்லை

கேளடா மானிடவா!

எம்மில் கீழோர் மேலோர் இல்லை

Akkini kunjondru kanden lyrics – அக்கினி குஞ்சொன்று கண்டேன்

The lyrics below are from the sound track “Akkini kunjondru kanden” from the Tamil film Bharathi.

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெட்டி அடிக்குது மின்னல்
கடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்
கூ கூவென்று விண்ணை குடையுது காற்று.
சட்ட் சட சட்ட் சட டட்டா
சட்ட் சட சட்ட் சட டட்டா
என்று தாளங்கள் கொட்டி கணைக்குது வானம்;
தாளம்கொட்டி கணைக்குது வானம்,

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

Jaya Vande Matharam lyrics – ஜய வந்தே மாதரம்

The lyrics below are from the sound track “Jaya Vande Matharam” from the Tamil film Bharathi.

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்தருவந்தே சொல்வது
வந்தே மாதரம்

ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்

சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்

வந்தே மாதரம்

தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஓ! வந்தே மாதரம்!

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

எப்பதம் வாய்த்திடு மேனும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
எப்பதம் வாய்திடும் மேலும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
வீழில் முப்பது கோடி முழுமையில் வீழ்வோம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்த ருவந்தே சொல்வது
வந்தே மாதரம்

ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்

சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்
வந்தே மாதரம்

தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஓ! வந்தே மாதரம்!

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்