Kabir in Gurbani

“Kabeer garab na keejiye, rank na hasiye koe,
Aja hu naao samund mein, kya jana kya hoye”
{ O Kabeer, don’t ever be proud or laugh at other’s misery,
Your boat is still in the world-ocean, who knows what may happen with you?}

“Kabeer aisa ko nahi, mandar de-e jarae,
Pancho larke maarke, rahe Raam lio lae”
{ O Kabeer, is there anyone who can burn his own house (‘mind’),
kill his five sons (lust, ire,avarice,attachment,ego) to remain lovingly attached to the Lord?)

“Kabeer charan kamal ki mouj ko, keh kese unmaan,
Kehbe ko sobha nahin dekhat hi parvaan”
{ O Kabeer, the ecstatic enjoyment of the Divine (enlightenment) is ineffable.
Describing it in words is doing injustice to it, it’s splendor is only to be self-experienced}

“Kabeer meri jaat ko, sabko hasne haar,
Balhari is jaat ko, jeh japyo sirjanhaar”
{ O Kabeer, everyone laughs at my social caste,
but, I am a sacrifice to it, as I got to meditate on the Creator in it.}

Ethilum Ingu Iruppan Lyrics – எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

The lyrics below are from the sound track “Ethilum Ingu Iruppan” from the Tamil film Bharathi.

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்  தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான்அறிவாரோ?

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த  ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

Ninnai Charanadainthen Lyrics – நின்னை சரணடைந்தேன்

The lyrics below are from the sound track “Ninnai Charanadinthen” from the Tamil film Bharathi.

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா,  நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா,  நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கின்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்ப்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம், நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக, தீமையை ஓட்டுக
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

என்னை கவலைகள் தின்ன தகாதென்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்