Lyrics : Oruvan Oruvan Mudhalali

படம் : முத்து (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஹேய்…. சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
ஹா ஹே ஹே ஹே ஹேய்
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம் தான் உணர மறுக்கிறது

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீ தான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அது தான் உனக்கு எஜமானன்

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா

பறவைகள் என்னைப் பார்க்கும் போது
நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது
முத்து முத்து என்கிறதே

இனிமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஆங்… ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

We are what we think All that we…

We are what we think
All that we are arises with our thoughts.
With our thoughts we make the world.
Speak or act with an impure mind
And trouble will follow you
As the wheel follows the ox that draws the cart.
We are what we think.
All that we are arises with our thoughts.
With our thoughts we make the world.
Speak and act with a pure mind
And happiness will follow you
As your shadow, unshakable.

Dhammapada, The Sayings of the Buddha